36
குழந்தை வளர்ச்சி பெறும் உடலையும்,
மலரும் உள்ளத்தையும் கொண்டது.
குழந்தையின் நல்ல வளர்ச்சிக்கு அடித்தளம்
அமைப்பது கல்வியாகும்.
உலகில் ஒரு புதிய கல்வி முறையை 20 ஆம் நூற்றாண்டில் உருவாக்கிய கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி (Maria Mantessori) ஆவார்.இவர் மனோதத்துவ மருத்துவர்.இத்தாலியில் முதன்முதலாக மருத்துவம் பயின்ற பெண்.அதனால் இத்தாலி நாட்டில் பெண்கள் மத்தியிலும்,முற்போக்காளர்கள் மத்தியிலும் இடம் பிடித்தார்.இவர் 1870 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இத்தாலியில் பிறந்தார்.மருத்துவராக இருந்தவர் கல்வி போதிக்கும் திசையில் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியதால் உலகப் புகழ் பெற்றார்.சிறு குழந்தைகள் கல்வி கற்கும் புதிய முறையை உருவாக்கினார்.மந்த புத்தி உள்ளவர்கள் நோயாளிகள் அல்ல.அவர்களுக்கு கல்வி கொடுத்தாலே சரியாகிவிடும் என்பதனை நிரூபித்துக் காட்டினார்.போக்கிரிகளாக இருந்த குழந்தைகளை திருத்தி படிக்க வைத்தார்.
குழந்தைகளின் உளவியல் தேவைகளை அறிந்து கல்வி பயிலச் செய்தார்.ஒவ்வொரு குழந்தையும் தானாக கல்வி கற்கும் முறையைக் கொண்டு வந்தார்.இந்தக் கல்வி முறை குழந்தைகள் தாமாக முன் வந்து செயல்படுவதற்கும்,தனது தேவைகளைத் தானே செய்து கொள்ளவும் வழி வகுத்தது.இம்முறையில் கல்வி கற்ற குழந்தைகள் சிறுவயதிலேயே சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர்.இதனால் மாண்டிசோரி கல்வி முறை உலகம் முழுவதும் பரவியது.சர்வதேச அளவில் இவரின் கல்வி முறைக்கு அங்கீகாரம் கிடைத்தது.இவர் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதினார்.பெண்ணுரிமை இயக்கங்களிலும் பங்கு கொண்டார்.இவர் 1952 ஆம் ஆண்டு மே 6 இல் இயற்கை எய்தினார்.