32
Truth is Powerful and its Prevails.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பிரபலமான பெண் சோஜோர்னர் ட்ரூத் (Sojourner Truth) ஆவார்.இவர் ஓர் ஆப்பிரிக்க –அமெரிக்க அடிமைத்தனத்தை ஒழிக்கப் பாடுபட்ட பெண்ணியவாதி.அஞ்சாமல் மனித உரிமைக்காக குரல் கொடுத்த போராளி.இவர் 1799 ஆம் ஆண்டு பிறந்தார்.இவரின் உண்மையான பெயர் இசபெல்லா பெளம்ஃப்ரீ (Isabella Baumfree) என்பதாகும்.இவர் கானாவில் இருந்து கொண்டு வரப்பட்ட அடிமைத் தொழிலாளியின் மகள்.இவர் பல முறை பல முதலாளிகளுக்கு அடிமையாக விற்கப்பட்டார்.இவருடைய முதலாளிகளில் ஒருவர் ,கிழவராய் இருந்த ஒரு அடிமைக்கு இவரைத் திருமணம் செய்து வைத்தார்.இவருக்கு 5 பிள்ளைகள். அவர்களும் அடிமைகளாகவே விற்கப்பட்டனர்.
இவரது முதலாளி இவரை ஏமாற்றி மகனை விற்று விட்டார்.வெள்ளையரை எதிர்த்து நீதிமன்றம் சென்று தனது மகனை மீட்டார்.பிறகு இவர் அடிமைத்தனத்தை எதிர்த்து குரல் கொடுத்தார்.மகளிரின் உரிமைக்காகவும் ,சமய நல்லிணக்கத்துக்காகவும் போராடினார். 1851 ஆம் ஆண்டில் ஓஹியோ மாநிலத்தில் நடந்த பெண்ணுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு நான் ஓர் பெண்ணல்லவா என்கிற பிரபலமான உரையாற்றினார்.பின்னர் இவர் சிறந்த பேச்சாளர் ஆனார். எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தபோதிலும் பல புத்தகங்களை எழுதினார்.40 ஆண்டு காலம் நாடு முழுவதும் பயணம்செய்து அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.இவர் 1883 ஆம் ஆண்டு நவம்பர் 26 இல் இயற்கை எய்தினார்.