29

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல ,அது ஒரு பாடம், ஒவ்வொருவரும்

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கற்றுக்கொண்டு

அதன் வழி நடக்க வேண்டிய ஒரு பாடம்.

சே குவேரா(Che Guevara) என்பவரின் புகைப்படத்துடன் கூடிய பனியன்களை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களும்,முற்போக்குவாதிகளும் அணிந்து கொள்வதை பெருமையாகக் கருதுகின்றனர்.கியூபா புரட்சியாளர்கள் சே என்று செல்லமாக அழைக்கின்றனர்.ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பினார். எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா என்பது இவரின் பெயராகும். இவர் 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று அர்ஜென்டினாவில் பிறந்தார். இவர் ஒரு சோசலிசப் புரட்சியாளர்,மருத்துவர், மார்க்சியவாதி மற்றும் அரசியல்வாதி. கியூபா உள்பட பல நாடுகளின் புரட்சிகளில் பங்கு பெற்ற போராளி. மனிதர்களைத் துயரிலிருந்து விடுவிக்க ஆசைப்பட்ட மனிதர். பூமியில் வாழ்ந்துசென்ற முழுமையான மாவீரன் என சே குவேராவைப் பலரும் புகழ்கின்றனர்.

கியூபாப் புரட்சியின்போது புதிய யுக்தியை அறிமுகப்படுத்தினார்.அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை நடுங்க வைத்த அந்த கொரில்லாப் போர்த்தந்திரம் தான் இன்றுவரை பல இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறது.அவர் கியூபாவில் 14 ஆண்டுகள் மத்திய வங்கியின் தலைவராக பணிபுரிந்தார்.பிறகு அனைத்து லத்தீன் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளாலும்,பொலிவியா படைகளினாலும் சதித்தனமான முறையில் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார் .கைதியாக அகப்பட்ட நேரத்தில்கூட மரணத்தை வரவேற்றார்.தன்னைக் கொல்ல வந்தவனைப் பார்த்ததும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன்,பிறகு என்னைச் சுடு என்று கூறி எழுந்து நின்றார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book