2
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றப்படி, உன்
செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு
ஏற்றப்படி, உன் வாழ்க்கை இருக்கும்.
சாக்ரட்டீஸ் (Sacrates) கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் (கி.மு 470-399) வாழ்ந்த ஒரு கிரேக்க தத்துவஞானி . இவர் ஏதென்ஸ் நகரில் பிறந்தார். உலகின் முதல் தத்துவஞானி என்று சாக்ரட்டீஸ் போற்றப்படுகிறார்.கடவுள் என்பவர் யார்? என்கிற கேள்வியை மதவாதிகளை நோக்கிக் கேட்டவர். அதனால் இவரை உலகின் முதல் பகுத்தறிவாளர் என்கின்றனர்.எதையும் கேள்விகள் கேட்டே உண்மையை அறிய வேண்டும் என்பதே இவரின் குறிக்கோளாக இருந்தது.பொது இடங்களில் மக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பகுத்தறிவு கருத்துகளை பரப்புவதில் அதிக நேரங்களை செலவிட்டார்.மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களிடமே கேள்வி மேல் கேள்வி கேட்டு அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்தார்.
சாக்ரட்டீஸின் எழுத்துகளும், சொற்பொழிவும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. மூடக் கொள்கைகளில் மூழ்கி இருந்த இளைஞர்களை சிந்திக்கத் தூண்டி அதற்கு எதிராக செயல்படச் செய்தார்.இளைஞர்களைக் கெடுக்கிறார், வானத்தையும் ,நிலத்தையும் பற்றி ஆராய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. சாக்ரட்டீஸ் தனது செயலுக்கு மன்னிப்புக் கோராமல் ஒரு கோப்பை விசத்தை சிரித்த முகத்துடன் குடித்து உயிர் துறந்தார்.
5