9

எல்லோரையும் நம்புவது பயங்கரமானது,

                                         ஆனால் யாரையுமே நம்பாமல்

                                         இருப்பது மிகவும் பயங்கரமானது.

அமெரிக்காவில் கெண்டக்கி என்னும் ஊரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் ஆப்ரகாம் லிங்கன் (Abraham Lincoln ) 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று பிறந்தார்.அவர் தந்தை ஒரு தச்சர்.லிங்கன் பள்ளிக்கு தினமும் காடுகளுக்கிடையில் 9 மைல் தூரம் நடந்து சென்றார்.புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிக்க முடியவில்லை.ஆகவே இரவல் வாங்கிப் படித்தார்.ஒரு சமயம் இரவல் வாங்கிய புத்தகம் மழையில் நனைந்து கிழிந்து விட்டது.புதுப்புத்தகத்தை வாங்கிக் கொடுக்க பணம் இல்லாத காரணத்தால் உரிமையாளரின் நிலத்தில் 3 நாட்கள் விவசாய வேலை செய்தார்.ஏழ்மையின் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.தாமாகவே படித்து வழக்கறிஞர் ஆனார்.

ஆப்ரகாம் லிங்கனுக்கு குடிப்பழக்கம் மற்றும் புகைக்கும் பழக்கம் கிடையாது.இவர் அரசியலில் ஈடுபட்டார். 1860 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் 16 வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களை அடிமைகள் என்ற பெயரில் விற்பது, இரும்புக் கம்பியால் கட்டுவது,சாட்டையால் அடிக்கப்படுவது போன்ற கொடுமைகள் இருந்தன.லிங்கன் 1862 ஆம் ஆண்டில் அடிமைத்தனத்தை ஒழித்தார். இதனால் உலகத் தலைவராக பிரபலம் அடைந்தார். மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவது மக்களாட்சி எனக் கூறிவந்தார். ஜான் வில்ஸ் பூத் என்பவன் துப்பாகியால் சுட்டதால் 1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று மரணமடைந்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book