23

பறிபோன உரிமைகளைப் பிச்சையாகப் பெற முடியாது.

தீர்மானங்கள் மூலமோ,மன்றாடுவதன் மூலமோ,

நியாயங்கள் பிறக்காது.

இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி என அழைக்கப்படுபவர் அம்பேத்கார் (Ambedkar) ஆவார்.பாபா சாகேப் என அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவ் என்னும் ஊரில் பிறந்தார்.இவர் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்று முதுகலைப் பட்டத்தையும், டாக்டர் பட்டத்தையும் பெற்றார்.அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்.பொருளாதாரம்,அரசியல், வரலாறு, சட்டம், தத்துவம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். இவர் ஆசிரியராகவும் , இதழியலாளராகவும்,எழுத்தாளராகவும்,சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கினார். இவர் இளம்வயதிலேயே தீண்டாமைக் கொடுமையால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

இவர் சாதிய அமைப்பையும்,தீண்டாமைக் கொடுமையையும் எதிர்த்துப் போராடினார்.தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனி வாக்காளர் தொகுதியினை பெற்றுத் தந்தார்.இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சரானார்.இவர் இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கினார்.இவரின் இறப்புக்குப் பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இவர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று டில்லியில் இயற்கை எய்தினார்.2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைகாட்சியும்,சி.என்.என்..பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச் சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

26

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book